போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்...!இந்தியா ஐ.நாவில் ஆதரித்து வாக்கு.

புதுடெல்லி , டிச .5 : ஆபத் தான போதைப் பொருட் கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க , இந்தியா ஆதரவு அளித்துள்ளது . ஐக்கிய நாடு கள் போதைப் பொருள் மருந்துகள் ஆணையத்தின் UNO 63 வது கூட்டம் கடந்த புதன் அன்று நடந்தது . அப்போது சர்வதேச அளவில் கஞ்சாவை ஒழுங்குபடுத்தும் வகை யிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன . இதன் படி கஞ்சாவை ஆபத்தான போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது . போதைப் பொருள் மருந்துகள் ஆணையத் தில் மொத்தமுள்ள 53 உறுப்பு நாடுகளில் இந்தியா , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு கள் உட்பட 27 நாடு கள் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தன . சீனா , பாகிஸ்தான் , ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகள் ஐநா.வின் முடிவுக்கு எதிராக வாக்களித்தன . உக்ரைன் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை . இதனை தொடர்ந்து கடந்த 59 ஆண்டுகளாக கஞ்சா மீது நீடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப் பட்டுள்ளது . தற்போது , 50 க்கும் மேற்பட்ட நாடுகள் கஞ்சாவை மருத்துவ திட்டங்களுக்காக பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது . கஞ்சாவுக்கு இந்த மாநாட்டில் ஆதரவு அளித்த இந்தியாவில் , கஞ்சா ஆபத்தான போதைப் பொருட்கள் பட்டியலில் இருக்கிறது . இதை பயன்படுத்துபவர்கள் , வளர்ப்பவர்கள் , வைத்திருப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Comments

Popular posts from this blog

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் நிறுவனம் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு ....

சேவூர் அருகே இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3வயது குழந்தை.