Posts

பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்சிறந்த இந்தி கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார்.

Image
வரலாற்றில் இன்று - 08-12-2020 பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் சிறந்த இந்தி கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார். 1920-ல் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.  சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடனும் நல்ல நட்பு ஏற்பட்டது. இவர் சிறந்த பேச்சாளர். இவருடைய உணர்ச்சி மிக்க உரைகளால் மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார். இவரது ஊர்மிளா என்ற காவியம் பெரிதும் போற்றப்படும் இந்தி இலக்கியமாக இன்றளவும் திகழ்கிறது. 1960-ல் பத்ம பூஷண் விருது பெற்றார். நாட்டின் சுதந்திரத்துக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்து தொண்டாற்றியவருமான பாலகிருஷ்ண சர்மா நவீன் 63-வது வயதில் (1960) மறைந்தார். நிருபமா வைத

இந்து மத துறவி ஆத்மானந்தா அவர்கள் பிறந்த தினம் இன்று .

Image

பாரம்பரியம் நெல் வகைகளை ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய நெல் வகைகளை அறிமுகம் செய்திட்ட நெல் ஜெயராமன் அவர்கள் நினைவு தினம் இன்று

Image

வரலாற்றில் இன்று (06.12.2020)#மாக்ஸ் #முல்லர்....✍ பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

Image
வரலாற்றில் இன்று (06.12.2020) #மாக்ஸ் #முல்லர்.... ✍ பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். ✍ இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அராபி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்தியப் புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும். ✍ ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று. ✍ இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார். ✍ இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். 'இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்' என்று போற்றிய இ

யார் ஒருவர் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறாரோ,யார் ஒருவர் பொது விமர்சனத்திற்கு அச்சப்படாமல் இருக்கிறாரோ,அடுத்தவர் கைப்பாவையாக,மாறாமல் போதிய சிந்தனையையும் சுயமரியாதையையும் பெற்று இருக்கிறாரோ அவரே சுதந்திரமான மனிதர் என்பேன் -பி,ஆர்,அம்பேத்கார்

Image

பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றிய ஆய்வு செய்திட்ட மொழியியாலர் திரு மாக்ஸ் முல்லர் அவர்கள் பிறந்ததினம் இன்று...

Image