Posts
Showing posts from December, 2020
பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்சிறந்த இந்தி கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார்.
- Get link
- Other Apps
வரலாற்றில் இன்று - 08-12-2020 பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் சிறந்த இந்தி கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார். 1920-ல் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடனும் நல்ல நட்பு ஏற்பட்டது. இவர் சிறந்த பேச்சாளர். இவருடைய உணர்ச்சி மிக்க உரைகளால் மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார். இவரது ஊர்மிளா என்ற காவியம் பெரிதும் போற்றப்படும் இந்தி இலக்கியமாக இன்றளவும் திகழ்கிறது. 1960-ல் பத்ம பூஷண் விருது பெற்றார். நாட்டின் சுதந்திரத்துக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்து தொண்டாற்றியவருமான பாலகிருஷ்ண சர்மா நவீன் 63-வது வயதில் (1960) மறைந்தார். நிருபமா வைத
இந்து மத துறவி ஆத்மானந்தா அவர்கள் பிறந்த தினம் இன்று .
- Get link
- Other Apps
பாரம்பரியம் நெல் வகைகளை ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய நெல் வகைகளை அறிமுகம் செய்திட்ட நெல் ஜெயராமன் அவர்கள் நினைவு தினம் இன்று
- Get link
- Other Apps
வரலாற்றில் இன்று (06.12.2020)#மாக்ஸ் #முல்லர்....✍ பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
- Get link
- Other Apps
வரலாற்றில் இன்று (06.12.2020) #மாக்ஸ் #முல்லர்.... ✍ பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். ✍ இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அராபி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்தியப் புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும். ✍ ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று. ✍ இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார். ✍ இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். 'இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்' என்று போற்றிய இ
யார் ஒருவர் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறாரோ,யார் ஒருவர் பொது விமர்சனத்திற்கு அச்சப்படாமல் இருக்கிறாரோ,அடுத்தவர் கைப்பாவையாக,மாறாமல் போதிய சிந்தனையையும் சுயமரியாதையையும் பெற்று இருக்கிறாரோ அவரே சுதந்திரமான மனிதர் என்பேன் -பி,ஆர்,அம்பேத்கார்
- Get link
- Other Apps
பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றிய ஆய்வு செய்திட்ட மொழியியாலர் திரு மாக்ஸ் முல்லர் அவர்கள் பிறந்ததினம் இன்று...
- Get link
- Other Apps
போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்...!இந்தியா ஐ.நாவில் ஆதரித்து வாக்கு.
- Get link
- Other Apps
புதுடெல்லி , டிச .5 : ஆபத் தான போதைப் பொருட் கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க , இந்தியா ஆதரவு அளித்துள்ளது . ஐக்கிய நாடு கள் போதைப் பொருள் மருந்துகள் ஆணையத்தின் UNO 63 வது கூட்டம் கடந்த புதன் அன்று நடந்தது . அப்போது சர்வதேச அளவில் கஞ்சாவை ஒழுங்குபடுத்தும் வகை யிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன . இதன் படி கஞ்சாவை ஆபத்தான போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது . போதைப் பொருள் மருந்துகள் ஆணையத் தில் மொத்தமுள்ள 53 உறுப்பு நாடுகளில் இந்தியா , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு கள் உட்பட 27 நாடு கள் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தன . சீனா , பாகிஸ்தான் , ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகள் ஐநா.வின் முடிவுக்கு எதிராக வாக்களித்தன . உக்ரைன் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை . இதனை தொடர்ந்து கடந்த 59 ஆண்டுகளாக கஞ்சா மீது நீடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப் பட்டுள்ளது . தற்போது , 50 க்கும் மேற்பட்ட நாடுகள் கஞ்சாவை மருத்துவ திட்
சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- Get link
- Other Apps
இன்றைய நிகழ்வுகள் - 05.12.2020 #சர்வதேச #பொருளாதார #மற்றும் #சமுதாய #முன்னேற்ற #தன்னார்வலர்களின் #தினம் .... சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. #உலக #மண் #தினம்... உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் டிசம்பர் 5ஆம் தேதியை உலக மண் தினமாகக் கடைபிடித்து வருகிறது. #ஜெயலலிதா... இன்று இவரின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்....!! தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் ஜெ,ஜெயலலிதா அவர்கள் நினைவு தினம் இன்று !
- Get link
- Other Apps
காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது...
- Get link
- Other Apps
*இன்றைய சிந்தனை (04.12.2020)* .................................................. *''நேர மேலாண்மை" (Time Management)''* ................................................ காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது... நேரம், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தேவை. எல்லோருக்குமே இது அவசியத் தேவை. நேரம் ஒரு பெரிய வளம். ஆனால்!, பணத்தைப் போல, பொருள்களைப் போல நேரத்தைச் சேமித்துவைக்க முடியாது... நேரத்தைக் கையாள முடியாத நாம் நேரமின்மையைப் பற்றிப் புலம்புவதைத் நாள்தோறும் நடவடிக்கையாகக் கொண்டிருக்கிறோம்... நமக்கு நெருக்கமான நபர்கள் பேசுவதைக்கூட நம்மால் செவி சாய்த்து கேட்க முடியாமல் போகிறது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது... "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. உங்களுடைய அந்தச் செல்வத்த
நல்லது நண்பர்கள் அறக்கட்டளை அவிநாசி சட்டமன்றத்தில் வாழும் மக்களின் கோரிக்கை தனை 2021 ம் ஆண்டிற்கான தேர்தல் கோரிக்கை அறிக்கையாக தயாரிப்பு..
- Get link
- Other Apps
சுதந்திரப் போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி அவர்கள் பிறந்த தினம்...
- Get link
- Other Apps
இன்று தேசிய கடற்படை தினம்....
- Get link
- Other Apps
இன்று 04.12.2020 தேசிய கடற்படை தினம் இந்திய எல்லையின் பெரும்பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது. இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள நாடு. இதனால், நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், இந்திய கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. உலக கடற்படை வரிசையில் இந்திய கடற்படை ஐந்தாவது இடத்தில் உள்ளது. 1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 'ஆபரேஷன் டிரிடென்ட்" என்ற பெயரில் டிசம்பர் 4ஆம் தேதி போர் நடந்தது. இதில் இந்திய கடற்படை, பாகிஸ்தானின் துறைமுக நகரான, கராச்சி மீது தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதை நினைவுப்படுத்தும் விதமாகவும், இந்திய வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறும் வகையில் கடற்படை சார்பில், டிசம்பர் 4ஆம் தேதி தேசிய கடற்படை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆர்.வெங்கட்ராமன் சுதந்திர இந்தியாவின் எட்டாவது குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன். இவர் 'வெள்ளையனே வெளிய
முன்னாள் இந்தியப்பிரதமரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஐ,கே,குஜ்ரால் அவர்கள் பிறந்த தினம் இன்று...
- Get link
- Other Apps
தமிழ் சிறார் வாசிக்கும் கதைகள் எழுதியவரும்.புதினம் படைப்பாளியுமான நெல்லை ஆ,கணபதி அவர்கள் பிறந்த தினம்
- Get link
- Other Apps
உலக மாற்று திறனாளிகள்தினம் இன்று....!!
- Get link
- Other Apps
உலக மாற்று திறனாளிகள் தினம் இன்று....!! ஊனம் ஒரு தடையல்ல...! ஊனம் ஒரு தடையல்ல.. வாழ்வதற்கு...! உலகமினி உனக்காக ஆள்வதற்கு..! கற்கள் இனி தடையில்லை நடப்பதற்கு...! காலமினி கைக் கொடுக்கும் கடப்பதற்கு...! வானமொரு தடையில்லை பறப்பதற்கு...! வானவில்லை நீ தொடலாம் வளைப்பதற்கு...! பூமியொரு தடையல்ல நீ நடக்க...! பூக்களுமே காத்திருக்கும் கைக் குலுக்க...! கனவுகளை நீ சுமந்து.. பள்ளிச்செல்வாய்...! கடமையுனை அழைக்கிறது அள்ளிக் கொள்வாய்...! - குடைக்குள் மழை சலீம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் நிறுவனம் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு ....
- Get link
- Other Apps
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் நிறுவனம் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தத்தனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு - நீர்நிலைகளை மாசுபடுத்தும் காற்றை மாசுபடுத்தி பொதுமக்களை பாதிக்கக்கூடிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் இல்லையேல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் கால்நடைகள் வளர்த்தல், பால் வியாபாரம் விவசாயக் கூலி வேலைகள் செய்து வருகின்றனர் தமிழக அரசு இப்பகுதியில் விவசாயத்தை அழித்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க உள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் தத்தனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தன
இந்திய தேசிய வழக்கறிஞர்கள் தினம் இன்று( National Advocate's Day )( 03 டிசம்பர் 2019 )
- Get link
- Other Apps
இந்திய தேசிய வழக்கறிஞர்கள் தினம் இன்று ( National Advocate's Day ) ( 03 டிசம்பர் 2019 ) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் Dr. ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளான இன்றைய தினத்தை வழக்கறிஞர்கள் தினமாக ஒரு சாராரும், 1909 ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஸ்ரீ அரவிந்தருக்காக (Sri Aurobindo) வாதாடி வெற்றிபெற்றுக் கொடுத்த, இங்கிலாந்தில் சட்டக்கல்வி கற்ற, இந்திய விடுதலைப் போராட்ட தலைவர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் அரசியல் குருவான தேசபந்து என்றழைக்கப்படும் சித்தரஞ்சன்தாஸ் பிறந்த நாளான நவம்பர் 05 ஐ ஒரு சாராரும் தேசிய வழக்கறிஞர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜிந்திர பிரசாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று ,.
- Get link
- Other Apps
அஞ்சறைப் பெட்டியில் அடங்கியிருக்கும் 10 வீட்டு வைத்தியங்கள் .. !
- Get link
- Other Apps
அஞ்சறைப் பெட்டியில் அடங்கியிருக்கும் 10 வீட்டு வைத்தியங்கள் .. ! நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம் . 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் , விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும் . 2.ஒரு கப் சாதம் வடித்த நீரில் , கால் தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம் , அஜீரணம் மாறும் . அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி , 4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும் . 3.ஒமம் , கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும் . வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும் . 4.சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும் . 5.படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும் . 6.சாம்பிராணி , மஞ்சள் , சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும் . 7.வி
அ.இ.அ.தி.மு.கழகம் அமீத் ஷா தமிழக வருகைக்கு பின்னர் அகில இந்திய அடிமைகள் கழகம் என அன்போடு அழைக்கப்படுகிறது
- Get link
- Other Apps
அ.இ.அ.தி.மு.கழகம் அமீத் ஷா தமிழக வருகைக்கு பின்னர் அகில இந்திய அடிமைகள் கழகம் என அன்போடு அழைக்கப்படுகிறது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க தமிழ்நாடு மாநில முதல்வரே விமான நிலையம் சென்று காத்திருந்தார் என்ற செய்தி ஒரு சிறிய சம்பிரதாய மீறலாகத் தோன்றலாம். இதெல்லாம் ஒன்றும் சட்டத்தை மீறிய செயலில்லையே, ஆங்கிலத்தில் ப்ரோட்டோகால் என்று சொல்லக்கூடிய சம்பிரதாயம் அல்லது அலுவல் நடைமுறைதானே, அதை மீறியதால் என்ன பெரிய இழப்பு என்று கேட்கலாம். ஆனால் இந்த செயலை எடப்பாடி பழனிசாமி செய்திருக்கும் தருணம் முக்கியமானது. அது முன்னெப்போதும் இல்லாத அளவு மாநில உரிமைகள் மீதும், சமூக நீதி கோட்பாடுகள் மீதும், தொழிலாளிகள், விவசாயிகள் மீதும் பாரதீய ஜனதா கட்சி அரசு தாக்குதல்கள் தொடுத்துவரும் நேரம். அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மாநில அரசியலின் தனித்துவத்தை, மாநில சுயாட்சிக்கான சாத்தியங்களை முற்றிலும் அழித்தொழிக்க பாரதீய ஜனதா கட்சி முனைந்துள்ள தருணம். இந்த நேரத்தில் முழுக்க, முழுக்க சுயநல அரசியலினை முன்னிட்டு முதல்வர் பதவியின் மாண்பினை எடப்பாடி பழனிசாமி சிதைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
நோய் தீர்க்கும் குளங்கள் இந்த திருமுருநாத சுவாமி கோயிலில் அக்னி தீர்த்தம், செண்பக தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தம், சண்முக தீர்த்தம், மகாமக குளத்தீர்த்தம் என 7 தீர்த்தக்குளங்கள் உள்ளது.. இந்த குளத்தில் குளிப்பவர்களின் நோய்கள் குணமாகிறது.மேலும் மனநிலை குன்றியவர்கள் இங்கு தங்கி தீர்த்தக்கிணற்றில் குளித்து நோயை தீர்த்து செல்வது இன்றும் நடைபெற்று வருகிறது.
- Get link
- Other Apps
திருமுருகன்பூண்டி, திருமுருகநாத ஸ்வாமி கோவிலில் தெப்பத்தேர் உற்சவ விழா திருமுருகன்பூண்டி கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையானதும், மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய 3 சிறப்புகளை பெற்றதும், சமயக் குறவர்களால் பாடல் பெற்றதுமான திருமுருகநாத சுவாமி கோயில் கொங்கு நாடுக்குட்பட்ட திருமுருகன்பூண்டியில் உள்ளது. கங்காதேவி மகாமக குளத்தில் மூழ் கி மாதவனேஸ்வரரை வணங்கி தம் பாவங்களை போக்கினார் என்பது ஐதீகம். நோய் தீர்க்கும் குளங்கள் இந்த திருமுருநாத சுவாமி கோயிலில் அக்னி தீர்த்தம், செண்பக தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தம், சண்முக தீர்த்தம், மகாமக குளத்தீர்த்தம் என 7 தீர்த்தக்குளங்கள் உள்ளது.. இந்த குளத்தில் குளிப்பவர்களின் நோய்கள் குணமாகிறது.மேலும் மனநிலை குன்றியவர்கள் இங்கு தங்கி தீர்த்தக்கிணற்றில் குளித்து நோயை தீர்த்து செல்வது இன்றும் நடைபெற்று வருகிறது. தெப்பக்குளம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் அப்போதே தெப்பக்குளமும் ஏற்படுத்தப்பட்டது. மகாமக திருநாளன்று புனித கங்கையானவள் தீ
அத்திக்கடவு - அவினாசி திட்டம் _ வருகின்ற 28 ம் தேதி அடிக்கல் நாட்டு விழாசேவூர் சுற்றுவட்டார பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
- Get link
- Other Apps
அத்திக்கடவு - அவினாசி திட்டம் _ வருகின்ற 28 ம் தேதி அடிக்கல் நாட்டு விழா சேவூர் சுற்றுவட்டார பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி சேவூர், பிப்.23- அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி, வருகின்ற 28 ம் தேதி அவினாசியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கு சேவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்திக்கடவு - அவினாசி திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி வட்டமானது ஆண்டிற்கு சராசரி 600 மி.மீ முதல் 700 மி.மீ வரையிலான குறைந்த மழைப்பொழிவைப் பெற்று வரும் ஒரு வறண்ட பகுதி ஆகும்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, சேவூர், பெருமாநல்லூர், ஊத்துக்குளி, காங்கேயம், குன்னத்தூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர் வட்டார பகுதிகள், ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை, புளியம்பட்டி, நம்பியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் இந்த அத்திக்கடவு - அவினாசி திட்டமாகும். இந்த வட்டத்தின் ஒரு பகுதியில் பவானி ஆறு சென்றாலும், இதன் பிற பகுதிகளு
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை}முதல்வரின் தனிப்பிரிவில் புகார்
- Get link
- Other Apps
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை}முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அவிநாசி, அக். 1}சின்னேரிபாளையத்தில் ரூ.35.26 லட்சம் மதிப்பில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலையில் புற்கள் முளைத்துள்ளால், தொடர்புடைய அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவிநாசி நாயக்கன்தோட்டம் பகுதியைச் சேர்ந்த டி.கே.தியாகராஜன் முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பது}திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னேரிபாளையம் முதல் சாலையூர் வழியாக வளையபாளையம் மாகாளியம்மன் கோயில் வரை ரூ.35.26 லட்சம் மதிப்பில் கடந்த 10 நாள்களுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், கோரை புற்கள் முளைத்துள்ளன. தார் சரியாக ஒட்டாமல் ஜல்லி கற்கள் தனியாக பெயர்ந்து வருகின்றன. தரமற்ற சாலை அமைக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடலடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிர
முறையான, திட்டமிடப்படாமல் கட்டப்படும் வரும் சாக்கடைகால்வாய் பணியை நிறுத்திய பொதுமக்கள் ...
- Get link
- Other Apps
திருமுருகன் பூண்டி நெசவாளர் காலனி விரிவாக்கம் பகுதியில் முறையான, திட்டமிடப்படாமல் கட்டப்படும் வரும் சாக்கடைகால்வாய் பணியை நிறுத்திய பொதுமக்கள் திருப்பூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7 வது வார்டில் உள்ள காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் ரேடியஸ் அவன்யூ என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பகுதியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. திருமுருகன்பூண்டி பேரூராட்சி சார்பில் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக காலை சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியை காண்ட்ராக்டர் கண்ணன் எடுத்து செய்து வருகிறார். இதற்கு முறையாக நிதி ஒதுக்கப்பட்டதா என்றும் தேர்தலை கருத்தில் கொண்டு அவசர வேலையாக செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சாக்கடை கால்வாய் கட்டும் பணியானது முறையாக சாக்கடை கழிவுநீர் செல்லாமலும், சரியான திட்டம் போடப்படாமலும் செய்யப்படுகிறது. மேலும், இரண்டு இடத்தில எல் வளைவு இருப்பதாலும், அதை ஒட்டியே தரைப்பாலம் இருப்பதுடன் அதன் இரண்டு பக்கமும் நடுவில் குடிநீர் குழாய்கள் போடப்பட்டு இருப்பதாலும் ஏற்கனவே சாக்கடை கழிவுநீர் செல்லாமல் அடிக்கடி
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், அவிநாசியில் உயர் மின் கோபுரவிளக்கு அமைக்கப்பட்டது. நீலகிரி எம்.பி. ஆ.ராசா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று வழங்கினார்
- Get link
- Other Apps
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், அவிநாசியில் உயர் மின் கோபுரவிளக்கு அமைக்கப்பட்டது. நீலகிரி எம்.பி. ஆ.ராசா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று வழங்கினார் . திமுக துணைப் பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசாவின் தொகுதி மேம்பாட்டு(உள்ளூர்வளர்ச்சித்தி ட்டம்) நிதியிலிருந்து, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அவிநாசி திருப்பூர், ஈரோடு சாலை சந்திப்பில் கைகாட்டிபுதூர்புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. உயர் மின் கோபுரவிளக்கு பொது மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தேர்தல் வாக்குறுதி மட்டுமல்லாது, தமிழக மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகம் முதலிடத்தில் உள்ளது. அவிநாசி நகரத்தின் நீண்ட காலமாக பொதுமக்களின் கோரிக்கையாகயும்,ஒன்றிய,நகர திமுக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, இந்
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது
- Get link
- Other Apps
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது அவிநாசி, சேவூர் அருகே பெரியகானூரில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீஸôர் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். சேவூர் அருகே பெரியகானூர் ஆதிதிராவிடர்காலனியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் சந்திரன்(39). மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இவருக்கு மனைவி, 16 வயது மகள், 14 வயது மகன் உள்ளனர். மகன் உறவினர் விட்டில் உள்ள நிலையில், சந்திரன் மது அருந்தி வந்து, அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததுள்ளார். இதனால், மனைவி, மகள் இருவரும் தனது பாட்டி வீட்டிற்கு சென்று தங்கி இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் புதன்கிழமை இரவு பாட்டி வீட்டில் இருந்த மகளை மட்டும் சந்திரன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவருந்தி விட்டு உறங்கியுள்ளார். அதன் பிறகு சந்திரன், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே மகள் கூச்சலிட்டு தந்தையிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறி தாயிடம் வந்து தெரியப்படுத்தியுள்ளார். இது குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர் போலீஸôர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...
- Get link
- Other Apps
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது தான் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு அவிநாசியில் இப்பகுதியில் அவிநாசி அத்திக்கடவு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த தத்தனூர் கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதித்தது நீர்நிலைகளை மாசுபடுத்தி மக்களை பாதிக்கக்கூடிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகள் ஒன்று திரண்டு சேவூர் சாலையிலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்று இந்த பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
சேவூர் அருகே இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3வயது குழந்தை.
- Get link
- Other Apps
சேவூர் அருகே இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3வயது குழந்தை. சேவூர், சேவூர் அருகே 3வயது பெண் குழந்தை இந்தியாவில் உள்ள 22 மொழிகளை குறைந்த நேரத்தில் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சேவூர் அருகே லூர்துபுரம், ஓனாய்பாறை பகுதியை சேர்ந்தவர் ரவி (35). இவர் பட்டப்படிப்பு முடிந்து விட்டு தனது தோட்டத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயிசில் (28) இவர்களுக்கு ஆக்னலோகிரேசியல் (6) என்ற மகனும், ஆண்டோனா சோலீக் (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3 வயது மகள் இந்தியாவில் உள்ள 22 மொழிகளின் பெயர்களை அதிவேகமாகவும், குறைந்த நேரத்திலேயேயும் (9 வினாடிகளில்) உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் இந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர்களிடம் கேட்டபோது, எங்களது மகள் ஆண்டோனாசோ லீக், ஒன்றரைவயது இருக்கும் போதே நாங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும், பேசினாலும் கூர்ந்து கவனித்து வந்தாள். பிறகு நாளாக நாளாக நாங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க தொடங்கினாள். இது எங்கள
சசிகலாவிற்கு அபராதம் கட்ட பணம் கொடுத்து உதவி செய்த உறவினர்கள் நான்கு பேருக்கு வழக்கறிஞர்கள் மூலம் நன்றி கூறியுள்ளாராம் சசிகலா.*
- Get link
- Other Apps
சசிகலாவிற்கு அபராதம் கட்ட பணம் கொடுத்து உதவி செய்த உறவினர்கள் நான்கு பேருக்கு வழக்கறிஞர்கள் மூலம் நன்றி கூறியுள்ளாராம் சசிகலா.* *சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலாவிற்கு ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.* *அந்த பணத்தை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.* *சசிகலாவுக்கான அபராத தொகையினை பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகிய 4 பேரும் செலுத்தி இருக்கிறார்கள்* *சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா.* *தண்டனை காலம் முடிவடைந்துள்ளதால் அபராதத்தொகையினை செலுத்தினால் வரும் ஜனவரி மாதம் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில்,* *அபராத தொகையான 10 கோடி ரூபாயினை செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.* *ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்திய சசிகலா,* *சுதாகரன் - விரைவில் விடுதலை2021ல் சசிகலா விடுதலை* *இந்நிலையில் அந்த அபராத தொகைக்கான டி.ட
அவிநாசி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- Get link
- Other Apps
அவிநாசி, பனியன் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஒரு தரப்பினர் அவிநாசி காவல் நிலையத்தை புதன்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேவூர் அருகே வடுகபாளையம், அய்யம்பாளையம் சின்ன ஒலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தஅம்மாசை மகன் தனபால்(19). அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் உடன் பணியாற்றும் சிறுமிக்கு கட்செவி அஞ்சல் அனுப்பி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறறது. இதையறிந்த, பனியன் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் தனபாலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறறது. இது குறித்து தனபால் அளித்த புகாரின்பேரில், சேவூர் போலீஸôர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனபாலைத் தாக்கிய மயில்சாமி, பழனிசாமி மற்றும் தனபால் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர். மேலும், புகார் அளித்த தனபால் மீது அவிநாசி அனைத்து மகளிர் போலீஸôர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பனியன் நிறுவன உரிமையாளர் மயில
பிரபாகரன் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தடுப்பது ஏன்?
- Get link
- Other Apps
பிரபாகரன் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தடுப்பது ஏன்? விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரன் சார்ந்த உள்ளடக்கங்களை பதிவிட்டதற்காக தனிப்பட்ட நபர்களின் ஃபேஸ்புக் பதிவுகள், கணக்குகள் மட்டுமின்றி சில ஃபேஸ்புக் பக்கங்களும் இதே போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக பிபிசி தமிழ் நேரடியாக முன்வைத்த கேள்விகளுக்கு பொதுப்படையான பதிலை வழங்கிய ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர், “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும், முக்கியமான கலாசார, சமூக மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் ஃபேஸ்புக்கிற்கு வருவதை நாங்கள் மதிக்கிறோம். எனினும், வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கும்” என்று தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES வெறுப்பையோ அல்லது வன்முறையையோ பரப்பும் வகையில் தங்கள் தளம் பயன்படுத்தப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. எனினும், ஒரு குறிப்பிட்ட இயக