மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது


அவிநாசி, சேவூர் அருகே பெரியகானூரில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீஸôர் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

 சேவூர் அருகே பெரியகானூர் ஆதிதிராவிடர்காலனியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் சந்திரன்(39). மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இவருக்கு மனைவி, 16 வயது மகள், 14 வயது மகன் உள்ளனர். மகன் உறவினர் விட்டில் உள்ள நிலையில், சந்திரன் மது அருந்தி வந்து, அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததுள்ளார். இதனால், மனைவி, மகள் இருவரும் தனது பாட்டி வீட்டிற்கு சென்று தங்கி இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் புதன்கிழமை இரவு பாட்டி வீட்டில் இருந்த மகளை மட்டும் சந்திரன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவருந்தி விட்டு உறங்கியுள்ளார். அதன் பிறகு சந்திரன், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே மகள் கூச்சலிட்டு தந்தையிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறி தாயிடம் வந்து தெரியப்படுத்தியுள்ளார். இது குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர் போலீஸôர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தந்தை சந்திரனை கைது செய்தனர்.

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...