திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது தான் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு அவிநாசியில் இப்பகுதியில் அவிநாசி அத்திக்கடவு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த தத்தனூர் கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதித்தது நீர்நிலைகளை மாசுபடுத்தி மக்களை பாதிக்கக்கூடிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகள் ஒன்று திரண்டு சேவூர் சாலையிலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்று இந்த பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

Comments