நோய் தீர்க்கும் குளங்கள் இந்த திருமுருநாத சுவாமி கோயிலில் அக்னி தீர்த்தம், செண்பக தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தம், சண்முக தீர்த்தம், மகாமக குளத்தீர்த்தம் என 7 தீர்த்தக்குளங்கள் உள்ளது.. இந்த குளத்தில் குளிப்பவர்களின் நோய்கள் குணமாகிறது.மேலும் மனநிலை குன்றியவர்கள் இங்கு தங்கி தீர்த்தக்கிணற்றில் குளித்து நோயை தீர்த்து செல்வது இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்த திருமுருநாத சுவாமி கோயிலில் அக்னி தீர்த்தம், செண்பக தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தம், சண்முக தீர்த்தம், மகாமக குளத்தீர்த்தம் என 7 தீர்த்தக்குளங்கள் உள்ளது.. இந்த குளத்தில் குளிப்பவர்களின் நோய்கள் குணமாகிறது.மேலும் மனநிலை குன்றியவர்கள் இங்கு தங்கி தீர்த்தக்கிணற்றில் குளித்து நோயை தீர்த்து செல்வது இன்றும் நடைபெற்று வருகிறது.
தெப்பக்குளம்
1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் அப்போதே தெப்பக்குளமும் ஏற்படுத்தப்பட்டது. மகாமக திருநாளன்று புனித கங்கையானவள் தீர்த்தவடிவில் திருக்குளத்தில் நீராடி மகிழ்ந்து திருமுருகநாதரை வணங்கி செல்வாள். காசி, கங்கை, கும்பகோணம் முதலான புண்ணிய தலத்தில் உயர்ந்தோருக்கு தானம் கொடுத்து வணங்கிய பலனையும் பெறுவார் என்பதும், அதேபோல் மகாமகத் திருநாளன்று இத்திருக்குளத்தில் புனித நீராடி மகாமக பிள்ளையாரை வணங்கி அருள்மிகு திருமுருகநாத சுவாமியை மனமுருகி அன்புடன் வழிபடுபவர்கள் கொடிய துன்பத்தை தருகிற வினையிலிருந்து நீங்கி, சிவானந்தமான பெருவாழ்வையும், சிவசாருப பதவியையும் பெற்று மண்ணில் சிறப்பாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
மகாமக விழா
இந்தநிலையில் திருமுருகன்பூண்டி திருமுருகநாத ஸ்வாமி தேர்த்திருவிழா கடந்த 13 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் 20ந் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து மகாமக கணபதி ஆலையம் அருகே உள்ள மகாமக திருக்குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தக்குளத்தில் தெப்பத்தேர்
விழா ஏற்பாடுகள்
விழாவில் திருப்பூர், ஈரோடு,நீலகிரி கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால் திருமுருகன் பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுபல்லவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தக்கார் லோகநாதன், செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி மற்றும் பசுமை பாரதத்தின் திருப்பூர் மாவட்ட தலைவரும் ஓம் பசுமை அங்காடி நிறுவனருமான உமாசங்கர், அவரது மனைவி சாந்தி, லிங்கேஸ்வரன் , ஒம் பசுமை அங்காடி, திருப்பூர் சைவ சித்தாந்த சபை நிர்வாகிகள் ஆகியோர் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment